கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட வேண்டுமானால் கம்ப்யூட்டரில் திறமை மிக்கவர்களால் மட்டுமே அது முடியும் என்ற மாயை உலகில் நிலவுகிறது. இதனை தகர்த்து யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தொழில்களைச் செய்ய முடியும் என்பதை விளக்குகிறது இந்நூல்.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தொழில்கள் என்றாலே அது சாப்ட்வேர் உருவாக்கம் தொடர்பான தொழில் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தமிழக இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இந்த துறையில் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால்.....
கம்ப்யூட்டர் சார்ந்த.... கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்கள் நிறைய இருக்கின்றன. அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு என்னென்ன புதிய தொழில்களை உருவாக்கலாம் என்பதற்கு இதில் யோசனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றை செயல்படுத்தினால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மறையும். புதிய சேவைகள் அறிமுகம் ஆகும்.
யார் வேலை கொடுப்பார்கள் என்று தேடிக் கொண்டு நிற்காமல் நாமே பலருக்கு வேலை கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இந்நூல் அமையப் பெற்றிருப்பபதால் எவர் வேண்டுமானாலும் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம்.
தமிழிலேயே எளிதாக படித்து புரிந்து கொண்டு செயல்படுத்த முன்வரும் எவருக்கும் இது சிறந்த வழிகாட்டியாக அமையும். தமிழில் விளக்கி சொல்லக்கூடிய நூல்கள் இல்லையே என்ற குறையைப் போக்குவதற்கும் இது தகுந்த நூலாக விளங்கும்.
Book Title : Kuraintha Muthaleettil Athika Laabam Tharum Computer Thozhilgal
Author : Dr. M. Lenin
Publications : Sixthsense Publications
Edition : First December 2008 Second 2013
Pages : 112